ஆசிரியர் அடித்ததில் மாணவன் மனநலம் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சரியாகப் படிக்காத மாணவரை ஆசிரியர் சரமாரியாக அடித்ததால் அந்த மாணவரின்மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதுக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

சென்னை பழவந்தாங்கலில் வசித்து வருபவர் எஸ்.ஆர்.யாதவ். இவர் கடலோரக்காவல் படையில் ஹவில்தாராக உள்ளார். இவரது மகன் விஜேந்தர் சிங் அப்பகுதியில்உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

விஜேந்தர் சிங் சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது ஆசிரியர் வாசுதேவன்,அடித்துள்ளார். பலத்த அடி விழுந்ததால் மாணவன் விஜேந்திர சிங் மன ரீதியாகபாதிக்கப்பட்டுள்ளார்.

அவரை யாதவ், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்த பின்னர் போலீஸில்புகார் கொடுத்தார். இதைப் பதிவு செய்த போலீஸார் இன்று ஆசிரியரை விசாரிக்கமுடிவு செய்தனர்.

அதன்படி இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் போலீஸார் பள்ளிக்குச்சென்றனர். ஆனால், போலீஸாரைப் பார்த்து பயந்து போன வாசுதேவன் அங்கிருந்துவேகமாக ஓடி விட்டார்.

வாசுதேவன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாம். அவர் மீது துறைரீதியானநடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+