நண்பர்களுடன் செக்ஸ்: இப்படியும் ஒரு கணவன்
சென்னை:தனது நண்பர்களுடன் நன்கு கலந்து பழகி, அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளகணவர் வற்புறுத்துவதாக அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை நீலாங்கரை ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின்மனைவி சிவ செல்வி. திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
சிவசெல்வியிடம் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அடிக்கடி வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அத்தோடு கணவர் தர்மராஜும்அடாத செயல்களில் ஈடுபட்டார்.
குழந்தைகளை சிவசெல்வியிடமிருந்து பறித்துக் கொண்டு அவரை தாய் வீட்டுக்குஅனுப்பி விட்டனர் தர்மராஜ் குடும்பத்தினர். இதுகுறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் சிவசெல்வி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் தர்மராஜின் தந்தை முனுசாமி அங்கு தலைமைக் காவலராக இருப்பதால்போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சென்னைமாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சிவசெல்வி புகார் கொடுத்தார்.
அதில், எனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். அத்தோடு,தனது நண்பர்களுடன் பழக வேண்டும், அவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும், லாட்ஜுக்கு நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறிகொடுமைப்படுத்துகிறார்.
இதுகுறித்து 15 முறை நீலாங்கரை போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது குழந்தைகளை என்னிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அதில்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications