குறளை அழித்து கருணாநிதியின் பொன்மொழிகள்
சென்னை:தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திருக்குறளை அழித்து விட்டுஅதற்குப் பதில் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் எழுதப்பட்டிருப்பதற்குஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் ராமதாஸும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகபேருந்துகளில் காலத்தால் அழியாத திருக்குறள் இடம் பெற்றிருந்தது. ஆனால்தற்போது திருக்குறளை அழித்து விட்டு அந்த இடத்தில் கருணாநிதி எழுதியதையும்,பேசியதையும் பொன் மொழி என்ற பெயரில் எழுதி வருகிறார்கள்.
திருக்குறளை அரசுப் பேருந்துகளில் எழுதுவதற்குக் காரணம் பேருந்தில் பயணம்செய்யும் மக்கள் குறிப்பாக, மாணவ, மாணவியர் அதைப் படித்து அதன்படிவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பெரிய தலைவர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், மகான்கள் ஆகியோர் தங்கள்வாழ்நாளில் வெளியிட்ட கருத்துக்களை அவர்களின் மறைவுக்குப் பின்னர் சமுதாயம்ஏற்று அவற்றை பொன்மொழிகள் என்று போற்றி மகிழ்வார்கள்.
அப்படிப்பட்ட சான்றோர்கள் தங்களுடைய எழுத்துக்களை ஒருபோதும்பொன்மொழிகள் என்று அவர்களே சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்அவர்கள் சான்றோர்கள்.
வள்ளுவருக்கு சிலை எடுத்து அவரை அய்யன் திருவள்ளுவர் என்றெல்லாம்அழைத்தவர் இன்று வள்ளுவரையும் மிஞ்சும் அளவுக்கு புலமை பெற்றவர் போலதன்னுடைய பொன்மொழிகளை அரசுப் பேருந்துகளில் பொருத்துவது வள்ளுவரைமட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழினத்தையே சிறுமைப்படுத்துவதாகும்.
எனவே உடனடியாக மீண்டும் திருக்குறளை அனைத்துப் பேருந்துகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக மிகப் பெரிய போராட்டம்நடத்தும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ராமதாஸ் கண்டனம்:
இதேபோல திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்ராமதாஸ் இதுகுறித்துக் கூறுகையில், அரசுப் பேருந்துகளில் திருக்குறளை அழித்துவிட்டு வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications