For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நிலவரம்: மன்மோகன் சிங் கவலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இலங்கையில் தமிழர்களின் அகதிகள் முகாம் மீது ராணுவம்குண்டு வீசித் தாக்குதல் நடத்தி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருவது குறித்துபிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களைக் குறி வைத்து ராணுவம் மீண்டும்வெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் உடனடியாக இந்திய அரசு தலையிடவேண்டும், மட்டக்களப்பில் 65 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கவேண்டும், ராஜபக்ஷே டெல்லி வரும்போது இந்தியாவின்கண்டனத்தை அவரிடம் தெவிக்க வேண்டும், இலங்கைக்குஆயுத உதவிகள் செய்யக் கூடாது என்று கோரிக்கைஎழுந்துள்ளது.

முதல்வர் கருணாநிதியும், இனியும் பொறுமை காக்க வேண்டுமாஎன்று கேட்டு காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இந்த நிலையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கருணாநிதியின் அறிக்கை நகலைஅவரிடம் கொடுத்து, இலங்கை நிலவரம் குறித்து விளக்கினார்.

இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும், பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்குஇந்தியா உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கருணாநிதியின்கோரிக்கைகளையும் பிரதமரிடம் பாலு தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்த பிரதமர், மட்டக்களப்பு சம்பவம்கவலை தருவதாகவும், இதை கருணாநிதியிடம்தெரிவிக்குமாறும் அவர் கூறினார்.

மேலும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுஅமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலாளர்ஆகியோருடன் விவாதிக்கவுள்ளதாகவும் பிரதமர்உறுதியளித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X