For Quick Alerts
For Daily Alerts
Just In
அமைச்சர் மைத்துனர் சாலை விபத்தில் பலி
காஞ்சிபுரம்:தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் மைத்துனர் சாலை விபத்தில் பலியானார்.அவரது தங்கை படுகாயமடைந்தார்.
தா.மோ.அன்பரசனின் தங்கை பவானி, அவரது கணவர் செல்வராஜ். இருவரும் நேற்று மாலை காஞ்சிபுரத்தில்நடந்த வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விழாவில் கலந்து கொள்வதற்காக கார் மூலம்சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்தனர்.
இவர்களின் கார் சின்னையன் சத்திரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்தலாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பவானி,டிரைவர் பச்சையப்பன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் அமைச்சர் அன்பரசன் விரைந்து வந்து தனது தங்கையைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
Comments
Story first published: Sunday, November 12, 2006, 5:30 [IST]