அக்னி-3 ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:அணு ஆயுதங்களுடன் 3,000 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணையின்சோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அக்னி-3 ஏவுகணை கடந்த ஜூலையில் முதன் முதலாக சோதனையிடப்பட்டது.ஒரிஸ்ஸாவில் உள்ள வீலர் தீவில் நடந்த இந்தச் சோதனை தோல்வியில் முடிந்தது.
சோதனையின்போது ஏவுகணை இலக்கை விட்டு பாதை விலகிச் சென்றதையடுத்துஅதை வானிலேயே வெடிக்கச் செய்தனர் ராணுவ ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கழகத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள்.
இந் நிலையில் மீண்டும் இந்த வருட இறுதியில் அக்னி-3 ஏவுகணையின் இரண்டாவதுசோதனையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ஏவுகணையின் சோதனை தோல்வி அடைந்ததற்கான காரணங்களைவிஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை. இதனால் இரண்டாவதுசோதனையை தள்ளி வைத்துவிட்டது டிஆர்டிஓ.












Click it and Unblock the Notifications