நுழைவு தேர்வை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை
சென்னை:தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யலாம் என பேராசிரியர்அனந்தகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு தமிழக அரசுக்குப்பரிந்துரைத்துள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைவைத்துக் கொள்ளலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து அரசுக்குப்பரிந்துரை செய்ய முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்அனந்தகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசுஅமைத்தது.
இந்தக் குழு சென்னை மற்றும் மதுரையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களை சந்தித்து கலந்தாய்வுக் கூட்டங்களைநடத்தியது.
இதைத் தொடர்ந்து குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று தமிழகஅரசிடம் அளிக்கப்பட்டது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான நபுணர் குழுஉறுப்பினர்கள் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.
அப்போது நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை அனந்தகிருஷ்ணன்,கருணாநிதியிடம் வழங்கினார். இந்த அறிக்கையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்யபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து வரும் சட்டசபைத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications