தலித் பஞ். தலைவர்களுக்கு இன்று பாராட்டு விழா
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின்தலைவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் நீண்டகாலமாக தலைவர் தேர்வு செய்யப்பட இயலாத சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்தஉள்ளாட்சித் தேர்தலின்போது இந்த நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலலை சுமூகமாக நடத்த உதவிய ஊர் மக்களையும், தலித் பஞ்சாயத்துத்தலைவர்களை கெளரவிக்கும் வகையிலும் சென்னையில் இன்று பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு தமிழக அரசு சமத்துவ பெருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாஇன்று மாலை கலைவானர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நான்கு தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினர்மற்றும் நான்கு ஊர் பொது மக்கள் சுமார் 300 பேர் நாகர்கோவில் சிறப்பு ரயிலில் இன்று அதிகாலை 4.25மணிக்கு சென்னை வந்தனர். அவர்களுடன் மதுரை மாவட்ட கலெக்டரும், விருதுநகர் மாவட்ட கலெக்டரும்மற்றும் அதிகாரிகளும் உடன் வந்தனர்.
ரயில் நிலையத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழுங்கஉற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்குக்கு சால்வை அணிவித்துவரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பரிதி இளம்வழுதி, சாத்தூர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர்தொல்.திருமாளவன், மோகன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுடம் கூறியதாவது,
பல ஆண்டுகளுக்கு பின் தேர்தலில் வெற்றி பெற்று பணிகளை தொடங்கி இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி,நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும் இன்றுமாலை முதல்வர் தலைமையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்த 4 பஞ்சாயத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்ய முறையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அனைத்து கட்சி ஒத்துழைப்புடன், அனைத்து உள்ளாட்சிதலைவர்களையும் அழைத்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications