90 ஊராட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல்
சென்னை:21 ஊராட்சி தலைவர் மற்றும் 69 துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின்னர் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி,பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நடந்தது.
இதில் சில இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு அதிமுகஎதிர்ப்பு தெரிவித்தது. இந்த இடங்களில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான் தேர்தல்நடைபெறவில்லை என்று அக்கட்சி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட 21 உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கும், 69துணைத் தலைவர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்,சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.