பிரதமர் வீட்டை நோக்கி பறந்த குவைத் விமானம்
டெல்லி:டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு உள்ள பகுதியை நோக்கி குவைத் ஏர்வேஸ் நிறுவன விமானம்பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களைக் கடத்தி நடு வானில்தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எப்பிஐ எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமானங்கள், விமான நிலையங்கள், பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில், இன்று டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் செல்லும் குவைத்ஏர்வேஸ் விமானம் கிளம்பியது. வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் திடீரென அது திசை மாறிச் செல்லத்தொடங்கியது.
டெல்லியில் விவிஐபிக்கள் வசிக்கும் பகுதிகளின் மேல் விமானங்கள் பறக்க சில பகுதிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லம் உள்ள பகுதியும் அதில் ஒன்று. இந்தப் பகுதியை நிாேக்கி குவைத்விமானம் பறக்க ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் உடனடியாகவிமானியை தொடர்பு கொண்டு வேறு பாதையில் விமானத்தைத் திருப்பினர். இது தெரியாமல் நடந்த தவறுஎன்பது பின்னர் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications