சரத்பவார் கட்சியில் இணைந்தது கருணாகரன் கட்சி

Subscribe to Oneindia Tamil

Karunakaranகொச்சி:கேரள முன்னாள் முதல்வரும் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற போட்டி காங்கிரஸ்கட்சியை நடத்தி வந்தவருமான கருணாகரன், தனது கட்சியை கலைத்துவிட்டு மத்தியவிவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கருணாகரனும் அவரது மகனும் கடந்த ஆண்டுஜனநாயக இந்திரா காங்கிரஸை தொடங்கினர்.

ஆனால், இந்தக் கட்சிக்கு தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இந் நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துள்ளார்கருணாகரன்.

கொச்சி பிரியதர்சினி நகரில் நடந்த பிரமாண்டமான விழாவில், இரு கட்சிகளும்இணைந்தன. நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலர்டி.பி.திரிபாதி, மத்திய விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல், கருணாகரன்,அவரது மகனும் கட்சியின் தலைவருமான முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடல் நலக்குறைவு காரணமாக சரத்பவார் கலந்து கொள்ளவில்லை என பிரபுல்படேல் கூறினார்.

ஆனால், கருணாகரனின் கட்சியை தனது கட்சியில் பவார் இணைப்பதற்கு காங்கிரஸ்தலைமை எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியில்இருந்து பவார் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+