தமிழகத்தில் மழை தொடரும்-நிரம்பியது பெரியாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. நேற்று பாம்பனில் அதிக அளவாக 8செ.மீட்டரும், வேதாரண்யத்தில் 5 செ.மீட்டரும், ஒட்டப்பிடாரத்தில் 4 செ.மீட்டரும்,சிதம்பரம், ராமநாதபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 3செ.மீட்டரும் மழை பெய்தது.

இந் நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் 48 மணி நேரத்திற்குஇடியுடன் கூடிய கன மழை பெய்யலாம்

என வானிலை மையம் அறிவித்துள்ளது.

நிரம்பியது பெரியாறு: வெள்ள எச்சரிக்கை

இந் நிலையில் குமுளி-தேக்கடியில் உள்ள அணையான முல்லைப் பெரியாறு அணை135 அடியைத் தொட்டு விட்டதால், பெரியாறு பாசனப் பகுதியில் வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையில்முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 136 அடி வரை நீர்தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதை 142 அடியாக உயர்த்த தமிழக அரசும்,முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிவருகின்றனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை மதிக்க மறுத்து விட்டதுகேரள அரசு. இந் நிலையில் தற்போது பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவந்தது.

தற்போது 135 அடியை அணையின் நீர் மட்டம் தொட்டு விட்டது. இதையடுத்துவெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரியாறு கரையோரம் உள்ள மக்கள்பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லமாறு இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்துள்ளார்.

மேலும் அணையின் நிலையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.உபரி நீரைத் திறந்து விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 136 அடியைநீர்மட்டம் தொட்டதும் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+