குவோத்ராச்சியை சோனியா சந்தித்தார்-நட்வர்
டெல்லி:கடந்த ஆண்டு ரஷ்யா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது இத்தாலிய குடும்ப நண்பரும்போபர்ஸ் ஊழலில் கமிஷன் அடித்தவருமான குவோத்ராச்சியை சந்தித்துப் பேசியதாக பதவி நீக்கம்செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் திடீரென புகார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த நட்வர் சிங், இராக் எண்ணெய்க்குஉணவு திட்டத்தில் கமிஷன் அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
தன்னை சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கைவிட்டுவிட்டு விட்டதாகக் கூறிவருகிறார் நட்வர் சிங். இந் நிலையில் அவரது மகன் ஜகத் சிங் மீது மீதும் அமலாக்கப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சோனியா மாஸ்கோ சென்றபோதுஅங்கு குவோத்ராச்சியை சந்தித்துப் பேசியதாகவும் பின்னர் இருவரும் சுவிட்சர்லாந்துவரை ஒன்றாக பயணம் செய்ததாகவும் கூறியுள்ளார் நட்வர் சிங்.