ஆசிய ஹீரோக்கள் பட்டியலில் நாராயண மூர்த்தி
டெல்லி:புகழ் பெற்ற டைம் இதழின் ஆசிய நாயகர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர், நாராயணமூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த அறுபது ஆண்டுகளில் வரலாற்றில் இடம் பிடித்த ஆசியர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தேசத் தந்தைமகாத்மா காந்தி, நவீன இந்தியாவின் சிற்பி நேரு, ஏழைகளுக்காக வாழ்ந்த அன்னை தெரசா, தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை எனபோற்றப்படும் நாராயண மூர்த்தி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டைம் இதழின் இந்த சிறப்பிதழ் நாளை விற்பனைக்கு வருகிறது. காந்தி, நேரு போன்ற இரு பெரும் தலைவர்களைப் பெற்ற பெருமை வெகு சிலநாடுகளுக்கே உள்ளது என்று மறைந்த இரு தலைவர்களுக்கும் டைம் புகழாரம் சூட்டியுள்ளது.
சத்தியாகிரகம், அகிம்சை ஆகியவற்றால் எதையும் வெல்ல முடியும் என்பதை முதல் முறையாக உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் மகாத்மா காந்தி.உலகின் மிகச் சிறந்த அசாதாரணமான தலைவராகவும் காந்தி திகழ்ந்தார் என டைம் இதழ் கூறியுள்ளது.
தொழில்துறையில் ஆசியாவுக்கு புதிய பெருமை சேர்த்துக் கொடுத்தவர்கள் என நாராயணமூர்த்தியையும், லட்சுமி மிட்டலையும் டைம்கூறியுள்ளது. இந்தியாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் நாராயணமூர்த்தி என டைம் புகழாரம் சூட்டியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினாரால் ஆளப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த மிட்டல், மேற்கத்திய நாடுகளை வென்று (ஆர்சலர்நிறுவனத்தை வாங்கியது) இந்தியர்களுக்கு புதிய கெளவரத்தை தேடிக் கொடுத்துள்ளார் என்று மிட்டலுக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம்.
இந்திய விளையாட்டுத் துறைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடிக் கொடுத்தவர், பெருமை சேர்த்தவர் என சச்சினுக்கு புகழாரம்சூட்டப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர நோபல் பரிசு வென்ற அமார்த்யா சென், சல்மான் ருஷ்டி ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானின் தேசத் தந்தை முகம்மது அலி ஜின்னா, பர்மா ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்டோரும் ஆசிய ஹீரோக்கள் வரிசையில்இடம்பெற்றுள்ள பிற தலைவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications