For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை மீது பொருளாதார தடை: திருமா

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், முதலில் செஞ்சோலை பள்ளிக் கூடம் மீது இலங்கைவிமானப்படை குண்டு வீசி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று குவித்தது.

தற்போது மட்டக்களப்பில் அப்பாவித் தமிழர்கள் 65 பேரை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இந்தத்தாக்குதலில் நார்வே தூதுக் குழுத் தலைவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இப்போது தமிழர்கள் பட்டினிச் சாவால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம்யாழ் நெடுஞ்சாலை மூடப்பட்டதே. உடனடியாக இந்த சாலையைத் திறக்க வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வரக் கூடாது. அதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு இயக்கப்படும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும். அதேபோலஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

மனித உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X