For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் பெட்டியால் பீதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை விமான நிலையத்தில் அட்டைப் பெட்டி ஒன்று தனியாக கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற செய்தி கிளம்பியதால் பெரும் பீதி நிலவியது.

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகள் நுழையும் வழியில் இன்று ஒரு அட்டை பெட்டிகிடந்தது. வெகு நேரமாகியும் அந்த அட்டைப்பெட்டியை யாரும் எடுக்க வரவில்லை.

இதனால் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அந்த அட்டைப் பெட்டியின்மீது சந்தேகம் ஏற்பட்டது. பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதி அந்த பகுதியில் இருந்த பயணிகளைபோலீசார் வெளியோற்றினர்.

மோப்ப நாய்களும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஸ்கேனிங்கருவிகள் மூலம் பெட்டியில் என்ன இருக்கிறது என சோதனையிட்டனர். ஆனால், அதில் என்ன உள்ளதுஎன்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் உடை அணிந்த வீரர் ஒருவர் அந்த அட்டைப் பெட்டியைஅகற்றி எடுத்துச் சென்றார். அதை பாதுகாப்பாக சோதனையிடம் பணி நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X