திமுக பஞ்சாயத்து தலைவர் மீது குண்டு வீச்சு
மதுரை:திமுகவைச் சேர்ந்த மதுரை மேலமடை பேரூராட்சித் தலைவர் சித்திக் மீதுஅடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தியதால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்தசித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்திக் மற்றும் திமுகவினர் சிலர் காரில் நேற்று இரவுசென்று கொண்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அவர்களது கார் சென்றபோதுமோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் காரை மறித்து நிறுத்தியது. பின்னர் நாட்டுவெடிகுண்டுகளை கார் மீது வீசி விட்டு அக்கும்பல் தப்பியோடி விட்டது.
இந்த குண்டு வீச்சில் காரிலிருந்த அத்தனை பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாகஅனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுஅனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் போட்டி காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள். குற்றவாளிகளில் 3 பேரை போலீஸார் அடையாளம்கண்டுள்ளதாகவும் தெரிகிறது.