காவல் நிலையங்களை தாக்க நக்சல்கள் திட்டம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள காவல் நிலையங்களைத் தாக்க நக்சலைட்டுகள்திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையொட்டி அங்கு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆந்திர எல்லையில் உள்ள ஆம்பலூர், திருவலம் உள்ளிட்ட முக்கிய காவல் நிலையங்களைத்தாக்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்தக் காவல் நிலையங்களில் ஏ.கே.47 துப்பாக்கி சகிதம் அதிரடிப்படை வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளனர். காட்பாடி அருகே உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும், தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் வாகனங்களும்தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications