சிபிஐயிடம் மாட்டிய தபால்துறை அதிகாரி-பியூன்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போஸ்ட் மாஸ்டரை மீண்டும் பதவியில் அமர்த்த ரூ. 20,000 லஞ்சம் வாங்கியஉதவி தபால் கண்காணிப்பாளர் மற்றும் அவரது உதவியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கிள்ளனூர் கிளை தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருந்தவர் சாந்தா தேவி.இவர் சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவரை அணுகிய உதவி தபால் கண்காணிப்பாளர் கருணாகரன், தனக்கு ரூ. 20,000 பணம் கொடுத்தால், மீண்டும்பணி நியமன உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். சரி என்று சாந்தா தேவி கருணாகரனிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிபிஐயின் ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் கொடுத்தயோசனைப்படி கிள்ளனூர் கிராமத்திற்கு கருணாகரனை வரச் சொன்னார் சாந்தா தேவி.

கருணாகரனும், தனது உதவியாளர் கோபாலுடன் பணத்தைப் பெறுவதற்காக அங்கு சென்றார். கருணாகரனிடம்சாந்தா தேவி ரூ. 20,000 பணத்தை வழங்கினார். அப்போது மறைந்திருந்த மணி தலைமையிலான சிபிஐபோலீஸார்இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இருவரும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர்சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+