நான் ஜெ காதில் நுழைந்த எறும்பு: சண்முகம்
மதுரை:ஜெயலலிதாவை யானை காதுக்குள் புகுந்த எறும்பு போல் நான் குடைந்து கொண்டிருக்கிறேன் என அதிமுகஎம்எல்ஏ சண்முகம் கூறியுள்ளார்.
மதுரையில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் சண்முகம் கலந்து கொண்டுபேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். அதிமுகஆட்சியின் போது, சென்னையில் தீவிரவாதிகள் ஆயுதம் தயாரித்ததை இந்த ஆட்சியில் கண்டுபிடித்துநடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்படி எல்லாம் நான் பேசுவதால், கட்சிப் பதவியை பறித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு தைரியம் இருந்தால்கட்சியில் இருந்து என்னை நீக்கிப் பார்க்கட்டும். நான் அவரை யானை காதுக்குள் புகுந்த எறுப்பாக குடைந்துகொண்டிருக்கிறேன்.
அரசு வழங்கிய இலவச கலர் டிவியை வாங்கிய ஒரு பெண் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரேஷனில்ரூ.2க்கு அரிசி வாங்குவோரை இப்படி அதிமுகவில் இருந்து நீக்க முடியுமா? அப்படி செய்தால், ஜெயலலிதாவும்,சசிகலாவும் தான் கட்சியில் மிஞ்சுவார்கள் என சண்முகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications