குடித்து விட்டு கார் ஓட்டிய மாணவர்களுக்கு அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் குடி போதையில், தாறுமாறாக கார் ஓட்டி சிறுவனை படுகாயப்படுத்திய நான்கு கல்லூரிமாணவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை அடையாறு பகுதியில் நேற்று இரவு ஒரு கார் படு வேகமாக வந்தது. இதைப் பார்த்த சாலையில்சென்றவர்கள் பயந்து பிளாட்பாரத்தில் பதுங்கினர். தாறுமாறாக வந்த அந்த கார் சாலையோரம் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சில சிறுவர்கள் மீது மோதியது.

இதில் அந்த சிறுவர்கள் சில அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவனின் கை ஒடிந்துபடுகாயமடைந்தான். பின்னர் அந்தக் கார் தொடர்ந்து நிற்காமல் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புக்கம்பியில் மோதி நின்றது.

இதைப் பார்த்த பொதுமக்கள் கோபமடைந்து அந்த காரை நோக்கி விரைந்து வந்து உள்ளே இருந்த நான்குபேரையும் அடித்து உதைத்து வெளியே கொண்டு வந்தனர். நான்கு பேரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களை அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில்நான்கு பேரும் தனியார் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

படுகாயமடைந்த சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது நிலைகவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தாறுமாறாக கார் ஓட்டி 6 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும்இரவில் தாறுமாறாக கார் ஓட்டி சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+