கிணற்றில் விசப்பட்ட மான்?: உயிருடன் மீட்பு
சென்னை:சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த மான்அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், தீயணைப்புப் படையினரும் சேர்ந்து உயிருடன்மீட்டனர்.
திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகரில் விவசாயக் கிணற்றுக்குள் அந்த புள்ளி மான்விழுந்து கிடந்தது.
தகவல் அறிந்ததும் அப்பகுதியினர் திரளாக கூடி விட்டனர். மழை பெய்து கிணறுமுக்கால்வாசி நிரம்பியிருந்தது. கிணற்றில் நீந்தியபடி அந்த மான் சுற்றி சுற்றி வந்தது.
இதையடுத்து பொது மக்கள் மானை கயிறு கட்டி வேகமாக வெளியே தூக்கினர்.பின்னர் போலீஸ், வனத்துறைக்குத் தகவல் தரப்பட்டது.
வேளச்சேரி வனச் சரகர் சத்தியமூர்த்தி விரைந்து வந்து மீட்கப்பட்ட மானை கிண்டிபூங்காவுக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அங்குள்ள மான்களுடன்விடப்பட்டது.
இப்பகுதிக்கு மான் எப்படி வந்தது என்பது வனத்துறைக்கு பெரும் வியப்பாகஉள்ளது. காரணம் இப்பகுதியில் இதுவரை மான் ஏதும் வந்ததில்லை.
யாராவது மானைக் கடத்திக் கொண்டு வந்திருக்க வேண்டும், பின்நர் பயந்து போய்மானை கிணற்றில் போட்டு விட்டுப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.