வேடசந்தூர்: லாரி-கார் மோதலில் 4 பேர் பலி
வேடசந்தூர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெங்களூரைச்சேர்ந்த தொழிலதிபர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமமூர்த்தி (35) தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை வேடசந்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே, தூத்துக்குடியிலிருந்து உப்புமூட்டைகளுடன் வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் ராமமூர்த்தி, அவரதுமனைவி, உறவினர் மற்றும் கார் டிரைவர் நாகலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் ராமமூர்த்தியின் மகள் ரஞ்சிதா படுகாயம் அடைந்தார். அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர் ஜெய்சங்கர் தப்பி ஓடி விட்டார்.












Click it and Unblock the Notifications