வேட்பாளர்கள் கணக்கு காட்ட நாளை கடைசி நாள்
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்தங்களது தேர்தல் செலவுக் கணக்கை நாளைக்குள்காட்டாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 13 மற்றும் 15ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 3லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல்செலவுக் கணக்கை, தேர்தல் முடிவு வெளியான ஒருமாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.அதன்படி நாளையுடன் அந்த காலக் கெடு முடிவடைகிறது.
நாளைக்குள் தேர்தல் கணக்கு செலவைத் தாக்கல்செய்யாதவர்கள் இனி வரும் தேர்தல்களில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கைசம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்அதிகாரிகளிடம் அவசரம் அவசரமாக தாக்கல் செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications