பல கோடி மதிப்பு விமான என்ஜின்கள் மாயம்
சென்னை:சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்களின் என்ஜின்கள்மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஜின்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.
என்.இ.பி.சி. என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் சென்னை விமானநிலையத்தின் 8வது நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பல மாதங்களாக இந்த விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கான வாடகையை என்.இ.பி.சி.நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நான்கு விமானங்களையும் விமான நிலைய குழுமம்பறிமுதல் செய்தது. இதேபோல தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 3 விமானங்களும் இதேகாரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன.
வாடகையைக் கட்டினால் விமானங்கள் திருப்பி வழங்கப்படும் என்று என்.இ.பி.சி. நிறுவனத்திற்கு விமானநிலைய குழுமம் பலமுறை கடிதம் அனுப்பியது. இந்த நிலையில், என்.இ.பி.சி. நிறுவனம் தனது விமானங்களைப்பார்வையிட்டது.
அப்போது நான்கு விமானங்களின் என்ஜின்களும் விமானத்தில் இல்லாதது தெரிய வந்தது. இதன் மதிப்பு பலகோடி ரூபாயாகும். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனம், எங்களது விமானங்களின் என்ஜின்களோடுஅவற்றை முழு இயக்க நிலையில் எங்களிடம் ஒப்படைத்தால் வாடகைப் பாக்கியைக் கட்டுகிறோம் என்றுஎன்.இ.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்களின் என்ஜின்கள் மாயமாகியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications