கார்த்திகேசு மனைவி கரீஷ்மாவுக்கு கத்திக் குத்து
சென்னை:மைனர் பெண் ஜமுனாவைக் கடத்தி கல்யாணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சிக்கி, சிறையில்அடைக்கப்பட்டுள்ள மலேசிய இளைஞர் கார்த்திகேசுவின் மனைவி கரீஷ்மாவை, ஜமுனாவின் தாயார் சரளாகத்தியால் குத்தியதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேசு தன்னை மலேசியாவில் விபச்சாரத்திற்குத் தள்ளிசித்திரவதைப்படுத்தியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கரீஷ்ா. இந்த வழக்கு விசாரணையில்இருந்தபோதே இருவரும் சமரசமாகிச் செல்வதாக கூறி வழக்கை திரும்பப் பெற்றனர்.
பின்னர் இருவரும் வண்ணாரப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளர் சரளாவின் மைனர் மகளான ஜமுனாவை தனது காதல் வலையில்வீழ்த்தினார் கார்த்திகேசு.
பின்னர் ஜமுனாவை கூட்டிக் கொண்டு தலைமறைவானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கார்த்திகேசுவையும், ஜமுனாவையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
பின்னர் இருவரையும் விஷம் குடித்த நிலையில் சென்னையில் வைத்து மடக்கினர். சிகிச்சைக்குப் பின்னர்கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் சரளா குடும்பத்துக்கும், கரீஷ்மாவுக்கும் இடையே மோதல்உருவானது.
கார்த்திகேசு கைதான பின்னர் கரீஷ்மா தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார். இந்த நிலையில் நேற்று தனதுவண்ணாரப்பேட்டை வீட்டுக்கு கரீஷ்மா வந்தார். வீட்டைக் காலி செய்த் விட்டுச் செல்லும் நோக்குடன் அவர்வந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த சரளா, நீதான் எனது குடும்பத்தை சீரழித்தவள், உன்னால்தான் எங்களது நிம்மதி போய்விட்டது என்று கூறி கரீஷ்மாவுடன் சண்டை பிடித்துள்ளார். சண்டை முற்றவே இருவரும் கைகலப்பிலும்இறங்கினர்.
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரளா, அரிவாள் மனையால் கரீஷ்மாவை வெட்டியுள்ளார். இதனால்கரீஷ்மாவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கரீஷ்மா போலீஸில் புகார் கொடுத்தார். அவரைசிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர்.
ககீஷ்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications