மஸ்கட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டுஇருப்பதாக வந்த தகவலால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்புஏற்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட் செல்லும் கல்ப் ஏர் நிறுவன விமானம் இன்று காலைகிளம்பத் தயார் நிலையில் இருந்தது. அப்போது விமான நிலையத்திற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் விமானத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.விமானம் முழுவதும் மோப்ப நாய்கள்சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையிட்டனர். இந்த சோதனையில் குண்டுஎதுவும் சிக்கவில்லை.
இந்த வெடிகுண்டு புரளி காரணமாக சுமார் 5 மணி நேரம் விமான நிலையத்தில்பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் மஸ்கட் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்தமிரட்டலைத் தொடர்ந்து விமானம் நிலையம் முழுவதும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications