வயிறு எரியும் கும்பல்கள்- கருணாநிதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிகாரப் பொறுப்புக்கு, ஆட்சிப் பொறுப்புக்கு நடைபெறும் எல்லாத் தேர்தல்முறைகளும் அப்பழுக்கற்றவையல்ல. ஏதேனும் ஓரிரு குறைகள் எழலாம் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சென்னையில் விமர்சனகூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்துமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு திட்டம் தொடக்கம், நல்லாட்சி நடக்கிறது என்றுபாராட்டு, புகழ் மாலை. இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை சில பேருக்கு.முறைப்படி அனுமதி பெற்று கூட்டம் நடத்த முன் வராமல் பிறகு அவர்களே அந்தக்கூட்டத்தை நடத்தாமல் நிறுத்திவிட்டு, பழியை அரசின் மீது போடுவார்கள்.இதோ அனுமதி, எப்போது வேண்டுமானாலும் கூட்டத்தை நடத்துக என்று சொன்னபிறகு ஒருவாரத்தில் மீண்டும் நடத்துவோம் என்று சொன்னார்கள். அப்படி நடத்தாமல்மூன்று வாரம் கழித்து, முதலில் கலந்து கொள்வதாக விளம்பரம்செய்யப்பட்டவர்களில் பாதி பேர் இல்லாமலேயே நடத்தியுள்ளனர்.

பத்து நாளைக்கு சேர்ந்தாற்போல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றாதவர்கள்,நன்றியென்றால் எந்தக் கடையில் விற்குமென்று கேட்பவர்கள் எந்தக் கட்சியிலாவதுஇடம்பிடித்து அந்தக் கட்சித் தலைமையையே ஆக்கிரமிக்கத் திட்டமிடுபவர்கள்,

ஒரு அமைப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே அங்கே முடிந்தவரை சம்பாதித்துக்கொண்டே அந்த அமைப்பு பற்றி அயலாரிடம் அவதூறு பேசுகிறவர்கள், யாராவதுநம்மை அழைத்து பேசச் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பவர்கள் என்றுஇப்படியொரு கும்பலை கூட்டி வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

கொள்கை மறவர் கொட்டிய குருதியை குழைத்துக் கட்டிய இந்த கோட்டையைஇடித்திடக் கிளம்பியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அந்த மன்றங்களில் மண்டலக் குழுக்கள்,நிலைக்குழுக்கள்கூட அமைந்து விட்டன. ஆனால், இந்த கும்பலுக்கு வயிறு எரிவதைஅடக்கிக் கொள்ள முடியவில்லை.

அதிகாரப் பொறுப்புக்கு, ஆட்சிப் பொறுப்புக்கு நடைபெறும் எல்லாத் தேர்தல்முறைகளும் அப்பழுக்கற்றவையல்ல. ஏதேனும் ஓரிரு குறைகள் எழலாம்,எழக்கூடும். அதையும் எச்சரிக்கையுடன் கவனித்து இனி திருத்திக் கொள்ள வழி காணஇயலும்.

இப்போது நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 155 வார்டுகளிலுமாவன்முறை? குறைபாடு? தவறு? இல்லை சில வார்டுகளில் மட்டுமே. அதிலும் சிலபூத்களில் மட்டுமே. ஆனால், அந்தக் கூட் டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தில் நடந்ததுஉள்ளாட்சித் தேர்தலே கிடையாது என்று முழங்கியிருக்கிறார்கள்.

அப்படி நடந்ததாக புகார் தரப்பட்ட சில இடங்களில் கூட மறு தேர்தலுக்குஉத்தரவிடப்பட்டு நடந்து முடிந்திருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+