குண்டு: 3 அல்-உம்மாவினருக்கு 8 ஆண்டு சிறை
சென்னை:சென்னை இம்பீரியல் ஹோட்டலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 3 அல்-உம்மாதொண்டர்களுக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில், கடந்த 1996ம் ஆண்டுசெப்டம்பர் 27ம் தேதி இரவு 9 மணியளவில் காபரே நடனம் நடந்து கொண்டிருந்தது.அப்போது சுமார் ஒன்பதரை மணியளவில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் 18 பேர் படுகாயமடைந்தனர். ஹோட்டலின் ஒரு பகுதியும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது காபரே நடனத்தைகண்டித்தே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம நடந்தது தெரிய வந்தது. மேலும் இதைசெய்தது அல்-உம்மாவைச் சேர்ந்த ஏர்வாடி காசிம், நசிருதீன், அப்துல்லாஆகியோர்தான் என்பதும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்த போலீஸார், 3 பேர் மீதும்பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆவடி தியாகராஜன், 3 பேருக்கும் தலா 8 ஆண்டுகள்சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும், இதுவரை சிறையில் இருந்த காலத்தைஇதிலிருந்து கழித்து விட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக் கேட்டதும் அப்துல்லாவும், நசிருதீனும் வாய் விட்டு அழுதனர். ஆனால்ஏர்வாடி காசிம் இது அநீதியான தீர்ப்பு, இதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றுகூறினார்.