சங்கரராமன்: ஆவணங்களை கலைத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:சங்கரராமன் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை, நீதிமன்றத்தின் மேற்கூரையைரப் பிரித்து உள்ளே இறங்கி கலைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குதொடர்பான பூர்வாங்க விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்தஆண்டு நடந்தது.

வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பெரிய டிரங்குப் பெட்டியில் வைத்துநீதிமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் ஒரு நாள் காலை நீதிமன்றஊழியர்கள் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தபோது,அறையின் மேல் கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

மேலும், சங்கரராமன் வழக்கு ஆவணங்கள் இருந்த பெட்டி திறந்து கிடந்ததையும்,அதிலிருந்த பல ஆவணங்கள் கலைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தனர். இதையடுத்துவிஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந் நிலையில் பி.எஸ்.கே. தெருவில் போலீஸார் வழக்கமான காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நபர் மர்மமான முறையில் நடமாடினார். அவரைபோலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்போது செல்வம் என்ற அந்த நபர் திடுக்கிடும் தகவலைச் சொன்னார். காஞ்சிபுரம்நீதிமன்ற மேல் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்து வழக்கு ஆவணங்கள் இருந்தபெட்டியைக் கலைத்துப் போட்டது நான் தான் என்றார்.

அந்தப் பெட்டியில் ஏதாவது நகை, பணம் இருக்கலாம், அதைத் திருடிச் செல்லலாம்என்பதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியதாகவும், சங்கரராமன் கொலைவழக்கு ஆவணங்கள் அதில் இருக்கும் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்றும்அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+