கேரளம்-தமிழக பஸ் மறிப்பு-சிவசேனா கலாட்டா
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் தமிழக பஸ்களைமறித்து போரட்டம் நடந்தது.
திருவனந்தபுரத்தின் தம்பானூர் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு தமிழக அரசு பஸ்களை கேரளசிவசேனை கட்சியினர் மறித்தனர். தமிழகத்துக்கு எதிராக கோம் பேராட்டபடி பஸ்களை கல்வீசித் தாக்கமுயன்றனர்.
இதனால் பயணிகள் அலறியபடி பஸ்களை விட்டு இறங்கி ஓடினர். ஆனாலும் தமிழக பஸ் ஓட்டுனர்கள் பஸ்ஸைவிட்டு இறங்கவில்லை. இதனால் அவர்களுடன் சிவசேனை கும்பல் வாக்குவாதம் செய்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் தகவல் அறிந்து போலீசார் ஓடி வந்து அந்தக் கும்பலைக்கலைத்து தமிழக பஸ்கள் செல்ல வழி விட்டனர். இதனால் அந்த பஸ்கள் அரை மணி நேரம் தாமதமாககிளம்பின.












Click it and Unblock the Notifications