பிரசாந்த்தை விட்டுப் பிரிந்தார் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரகலட்சுமி அவரை விட்டுப் பிரிந்து தனது தாய்வீட்டுக்குச் சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பிரசாந்த்,சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

பிரசாந்த்துக்கும், சென்னை தி.நிகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளானகிரகலெட்சுமிக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் திருமணம்நிடந்தது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்தத் திருமணம் பெற்றோர்களால்நிச்சயிக்கப்பட்டதாகும்.

திருமணத்திற்குப் பின்னர் பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சந்தோஷமாக குடும்பவாழ்க்கையை ஆரம்பித்தனர். சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தைபிறந்தது.

இந் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத்தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது தாயார் வீட்டுக்கு கிரகலெட்சுமி சென்று விட்டார்.

அவர் திரும்பி வர மறுத்து வரும் நிலையில் பிரசாந்த், குடும்ப நல நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், எனது மனைவி கிரகலெட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக என்னைப்பிரிந்து சென்று விட்டார். அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். எங்களைசேர்த்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் கிரகலெட்சுமிநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+