தமிழகத்தில் வானிலை தொடர்ந்து மோசம்
நாகப்படினம்:வங்கக் கடலில் வானிலை மோசமாக இருப்பதால் தமிழக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் நீடிக்கிறது.
இது புயலாக மாறினால் ஏற்படும் நிலைமையை சமாளிக்க நாகை மாவட்டத்தில் உள்ள 21 புயல் பாதுகாப்புமையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணியில் துணை கலெக்டர்கள் தலைமையில்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனது.
அதே போல பிற கடலோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீலகிரி: சாலை சீரமைக்கும் பணி தாமதம்
இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் ஊட்டி, மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கும் பணிதாமதமாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் ஊட்டி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் நிலச்சரிஏற்பட்டது. இதையடுத்து சாலை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களும், ராணுவமும்ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் நீலகரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இப்பகுதியில் தொடர்ந்துமழை பெய்து கொண்டிருப்பதால், சாலை சீரமைக்கும் பணியும், இரும்பு பாலம் அமைக்கும் பணி தாமதமாகநடைபெற்று வருகிறது.
இந் நிலையில் நேற்று பெய்யாத கனமழையால் குன்னூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவும்ஏற்பட்டுள்ளது. மேலும் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications