வாரியத் தலைவர் ஆனார் குமரி அனந்தன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழ்நாடு அரசின் பனை வாரியத் தொழில் வாரியத் தலைவராக குமரி அனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் மொத்தம் 13 நல வாரியங்கள் அமைக்கப்படுவதற்கானஆணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் கட்டமாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், சட்டசபை முன்னாள் உறுப்பினருமான குமரிஅனந்தன், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் வாரியத்திற்கு அரசுப் பிரதிநிதியாக, தலைவராக நியமிக்கப்படுகிறார்என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த வாரியத்தின் ஏனைய உறுப்பினர்களும், பிற வாரியங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின்பெயர்களும் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications