ஈராக் போர் மிகப் பெரிய தவறு: பிளேர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:ஈராக் மீது போர் தொடுத்தது மிகப் பெரிய தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி அமெரிக்கா ஈராக் மீதுபடையெடுத்தது. அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த இங்கிலாந்துபிரதமர் பிளேர், அமெரிக்க படைக்கு நிகராக தனது நாட்டு படை வீரர்களையும்போரில் ஈடுபடுத்தினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான அமெரிக்க ஆதரவு படையினரின் கடும்தாக்குதலால் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேனும் பிடிபட்டார். ஆனாலும் அமெரிக்காசொன்ன முக்கியக் குற்றச்சாட்டான பேரழிவு ஆயுதக் குவியலில் ஒரு சின்ன இரும்புத்துண்டைக் கூட அமெரிக்கவால் மீட்க முடியவில்லை.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்பதை அமெரிக்கா பகிரங்காக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட அத்தகைய ஆயுதங்கள் அறவே இல்லை என்பதை உலகம்புரிந்து கொண்டது. சரி, வந்தது வந்து விட்டோம், வழித்து விட்டு இடத்தைக் காலிசெய்வோம் என்ற அடிப்படையில் ஈராக்கை ரணகளப்படுத்தி வருகின்றன அமெரிக்காதலைமையிலான படைகள்.

தினசரி அங்கு நடைபெறும் சண்டைகளில் அப்பாவி ஈராக்கியர்கள் பலியாகிவருகின்றனர். அமெரிக்காவின் படையெடுப்புக்குப் பின்னர் 6 லட்சத்திற்கும்மேற்பட்ட ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில் ஈராக் போர் தவறானது என்று பிளேர் பகிரங்கமாக கூறியுள்ளார்.அவரது இந்த ஓபன் ஸ்டேட்மென்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரபுநாட்டுத் தொலைக்காட்சியான அல் ஜசீராவின் ஆங்கில அலைவரிசைக்கு பிளேர்அளித்த பேட்டியில்தான் இவ்வாறு தெரிவித்தார்.

பிளேர் கூறுகையில், ஈராக் மீது நடந்த படையெடுப்பு இதுவரை எந்தவித நல்லவிளைவையும் கொடுக்கவில்லை. இதுவரை நடந்துள்ளது பேரழிவுதான். போர்தவறாகி விட்டது.

திட்டமிட்டதில் ஏற்பட்ட தவறுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். மேலும்அல்கொய்தா, சன்னி முஸ்லீம்களின் கூட்டு ஒருபுறம், ஈரான் ஆதரவு ஷியாமுஸ்லீம்கள் மறுபுறம், இப்படிப்பட்ட நிலையில் எங்களது இலக்கு குறி தவறிவிட்டது. சமாளிப்பது சிரமமாகி விட்டது.

மொத்தத்தில் சண்டையை விரும்புபவர்கள் பெரும்பான்மையாகவும், அமைதியைவிரும்புபவர்கள் குறைவாகவும் போய் விட்டதால் ஈராக்கில் நிலைமைகட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்றார் பிளேர்.

பிளேரின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்நிலையை முழுமையாக ஆதரித்த ஒரே நாடு இங்கிலாந்து மட்டுமே. படைகளையும்உடனேயே அனுப்பி வைத்தார் பிளேர்.

ஈராக் விவகாரத்தில் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட நிலைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் தங்களது ஆவேசமான பதிலைக் காட்டி விட்டனர். இதனால் புஷ்ஆடிப் போயுள்ளார். இந்த நிலையில், பிளேர் பகிரங்கமாக ஈராக் போர் தவறானது,அது பேரழிவை ஏற்படுத்தி விட்டது என்று கூறியுள்ளது சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பேரழிவு என்ற வார்த்தையை பிளேர் பயன்படுத்தவில்லை என்றுஇங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+