வெள்ளத்தில் சிக்கி 5 ஐயப்ப பக்தர்கள் பலி
கோவை:கோவை மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாகஅடித்துச் செல்லப்பட்டனர். 10 பேர் உயிர் தப்பினர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பொழிந்து வருகிறது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம், அப்படியே அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், மழை தொடரும் எனவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் மழை காரணமாகவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. உடுமலையில், உள்ள திருமூர்த்தி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளித்தி ஐயப்ப பக்தர்கள் 15 பேர்நீரில் சிக்கினர். இதில், 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மீண்டனர்.
ஆனால் ஏழுமலை, மணிகண்டன், மகேந்திரன், நந்தகுமார், சந்திரசேகரன் ஆகிய ஐந்து பக்தர்களும் நீரில்அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விருத்தாச்சலம் பகுதியில் கொட்டிய பேய் மழையால், மணிமுத்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் தரைப் பாலத்தை மூடியபடி தண்ணீர் ஓடிக் கொண்டுள்ளது. இதேபோல கோகி அணை நிரம்பியதால்அது திறக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தா ஆற்றங்கரையோரப் பகுதிகலில் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் நேற்று விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications