ஊட்டி: மலைப் பாதையில் மீண்டும் நிலச்சரிவு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:நீலகிரி மலைப் பாதையில் தொடரும் மழை காரணமாக மீண்டும் நிலச்சரிவுஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம், மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த கன மழை காரணமாக சமீபத்தில் ஊட்டி மலைப்பாதையில் நூற்றுக்கணக்கான இடத்தில் மண் சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டது. பலஇடங்களில் பாறைகளும் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் லாரி உருண்டு விழுந்ததில் ஒரு கிளீனர் பலியானார். மண் சரிவைசரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் பாதைகளும் பல இடங்களில்சேதமடைந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்தும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ உதவியுடன் சீரமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும்மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.குன்னூர் முதல் சில்வர் பாலம் வரையிலான பகுதிகளில் சில இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது.

புதுக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் அந்தப் பாதையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்லியாறு பகுதியிலும் 3 இடங்களில் புதிதாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து கோத்தகிரி வழியாக போக்குவரத்துதிருப்பி விடப்பட்டது. தற்போது அந்தப் பாதையிலும் மண் சரிவு ஏற்படுள்ளதாககூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பாதையில் போக்குவரத்து நெருக்கடிஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி பகுதியிலும் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டால் நீலகிரி மாவட்டம்,பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+