ராணுவம்-புலிகள் கடும் மோதல்: பலர் பலி

Subscribe to Oneindia Tamil

வவுனியா:மட்டக்களப்பு மாவட்டத்தின் 3 இடங்களில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டைநடந்துள்ளது. தாண்டிக்குளம் என்ற இடத்தில் கண்ணிவெடிக்கு பல ராணுவ வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில பெரும் தாக்குதலுக்கு ராணுவம், விடுதலைப் புலிகளும் தயாராகி வருவதாக பரஸ்பரம்சந்தேகிக்கப்படும் நிலையில் இரு தரப்பினும் ஆங்காங்கே கடுமையாக மோதி வருகின்றனர்.

விடத்தல் தீவு அருகே விடுதலைப் புலிகளின் 3 படகுகளை நேற்று கடற்படை வீரர்கள் தாக்கி மூழ்கடித்தனர்.இதில் 15 புலிகள் இறந்ததாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வாகனத்தில் சென்ற பல ராணுவவீரர்கள் பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அங்குள்ள பள்ளிக் கூட விடுதிக்குள் புகுந்துதங்கியிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மாணவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் வவுனியாவில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணி வெடியில்சிக்கிய ராணுவ வாகனம் ஓமந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதேபோல, வவுனியாத் தீவு, கொம்மந்துரை, கரும்பாலம் ஆகிய இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவரை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் எத்தனை பேர்பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+