மனைவிக்கு கொடுமை: பதவி இழந்தார் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் அங்காளன், கட்சிமேலிடத்தின் கட்டளைப்படி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

புதுவை அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் அங்காளன். இவரது மனைவி கவிப்பிரியா.இவர் சமீபத்தில் தன்னை அமைச்சர் அங்காளன் கொடுமைப்டுத்தி, சித்திரவதை செய்வதாக போலீஸில் புகார்கொடுத்தார்.

முதலில் இந்தப் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கவிப்பிரியாவுக்கு ஆதரவாகபல்வேறு மகளிர் அமைப்புகள் களத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து கவிப்பிரியாவின் புகாரை போலீஸார்கைது செய்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார் அங்காளன். இந்த நிலையில் கவிப்பிரியாவிவகாரத்தில் அங்காளனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்றகோரிக்கை வலுத்து வந்தது.

அங்காளன் குறித்த விவரம் மேலிடத்தின் காதுகளுக்கும் சென்றது. இதைத் தொடர்ந்து அங்காளன் தனதுஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதை ஏற்ற அங்காளன்நேற்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அங்காளன் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக முதல்வர் ரங்கசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். கவிப்பிரியாவிவகாரத்தில் அங்காளன் மீது இனி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கவிப்பிரியா தரப்பு எதிர்பார்க்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+