சபரிமலை கோவில் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ்
சபரிமலை:கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ்செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை ரூ.30 கோடிக்கு திருவிதாங்கூர்தேவஸ்தான வாரியம் இன்சூரன்ஸ் செய்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களுக்குஇலவச விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தையும் தேவஸ்தான வாரியம்அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும்,தேவஸ்தான வாரியத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டத்தின்படிஐயப்பன் கோவிலில் உள்ள தங்க மேல் கூரை இன்சூர் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கோவில் நகைகள், விலை உயர்ந்த பொருட்களும் இன்சூர்செய்யப்பட்டுள்ளன. இவை ரூ. 5 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளது.தேவஸ்தான நிர்வாக கட்டடம் ரூ. 1 கோடிக்கு இன்சூர் எடுக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கான விபத்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிலக்கல்பகுதியிலருந்து சன்னிதானம் வரையிலான 18 கிலோமீட்டர் தொலைவிலானபாதையில் வரும் பயணிகளுக்கு விபத்தினால் காயம் அல்லது உயிர்ச் சேதம்ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இதேபோல சபரிமலையில், பணியில் ஈடுபட்டிருக்கும் தேவஸ்தான மற்றும் அரசுஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் காப்பீட்டுத்தொகையாக கிடைக்கும்.
இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் ரூ. 14.75 லட்சத்தைபிரீமியமாக வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications