மோசடி-3 போலி பாதிரியார்களுக்கு குண்டாஸ்
சென்னை:சென்னையில் வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் பல லட்சம் ரூபாய்பணத்தை மோசடி செய்த 3 போலி பாதிரியார்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சமீபத்தில் வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் பல கோடிரூபாய்களை தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் மோசடிசெய்ததாக போலி பிஷப்புகள் யோபு சரவணன், அனந்தராஜ் ஆகியோர் சிக்கினர்.
இதில் அனந்தராஜ் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சரவணன் தொடர்ந்துதலைமறைவாக இருந்து வருகிறார். இதே போன்ற மோசடியை செய்ததாக ஐசக்சாமுவேல், சாலமன், ஜோசப் சாலமன் ஆகிய பாதிரியார்களை சென்னை போலீஸார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த மூன்று போலி பாதிரியார்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார்கைது செய்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் புரசைவாக்கத்தில் அறக்கட்டளைஒன்றை நடத்தி அதன் மூலம் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துகாண்டிராக்டர்களை மோசடி செய்து பணம் வசூலித்துள்ளனர்.
இவர்களுக்குத் தலைவராக இருந்து செயல்பட்ட சத்தியசீலன் என்பவர் இன்னும்பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.












Click it and Unblock the Notifications