For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாசமலர் கதாசிரியர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:புகழ் பெற்ற பாசமலர், ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்கு கதை எழுதியவரான கொட்டாரக்காராசென்னையில் காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல கதாசிரியர் கொட்டாரக்காரா. சிவாஜி கணேசன் நடித்த பாசமலர், ஆண்டவன்கட்டளை, எம்.ஜி.ஆர். நடித்த பரிசு உள்ளிட்ட பல்வேறு படங்களுக்குக் கதை எழுதியவர் கொட்டாரக்கரா.

மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் 47 படங்களை இவர் தயாரித்துள்ளார்.மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீரின் 17 படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த கொட்டாரக்கரா இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 85. இந்தநிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார்.

கொட்டாரக்கராவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகர்மயானத்தில் நடைபெறுகிறது.

கொட்டாரக்கரா உடலுக்கு முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி,தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X