சந்தைக்கு வந்த லாலு குதிரை!
பாட்னா:ரயில்வே அமைச்சர் லாலுவின் குதிரையான பவன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ரேட் அதிகமாகஇருப்பதால் இதுவரை குதிரை போணியாகாமல் உள்ளதாம்.
லாலு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அவரது வீட்டுப் பண்ணையும், அதில் வளர்ந்து வந்த ஆடு, மாடு,குதிரை போன்ற கால்நடைகளும்தான். அந்த அளவுக்கு கால்நடைப் பிரியர் லாலு. அத்தோடு தனது குலத்தொழிலாளான கால்நடை வளர்ப்பை அவர் பெரிதும் மதிப்பவர்.
லாலு முதல்வராக இருந்தபோதும், பின்னர் அவரது மனைவி ராப்ரி முதல்வராக இருந்தபோதும் அவர்களதுஅரசு வீட்டை அலங்கரித்தது கால்நடைகள்தான். ஏகப்பட்ட ஆடு, மாடுகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.
இப்போது இருவருமே முதல்வர் பதவியில் இல்லாததால் அரசு வீட்டைக் காலி செய்ய வேண்டியதாகி விட்டது.இதனால் இதுவரை வளர்த்து வந்த ஆடு, மாடுகளை எங்கு வைத்த வளர்ப்பது என்பது தெரியாததால், அவற்றைவிற்று விட்டனர்.
இப்போது லாலு வசம் இருப்பது அவரது ஜட்கா (குதிரை வண்டி) பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட குதிரைபவன் மட்டுமே. இப்போது அந்தக் குதிரையையும் தள்ளி விட்டு விட லாலு முடிவு செய்துள்ளார். பவன்,சோனோபூர் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையை ரூ. 1.51 லட்சமாக லாலு நிர்ணயித்துள்ளார்(ஆத்தாடியோவ்!)
லாலு குதிரை என்பதால் ஏகப்பட்ட மக்கள் அதைப் பார்க்க அலை மோதுகின்றனராம். லோக்கல் மக்கள்மட்டுமல்லாது இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் லாலுவின் பவன்கவர்ந்து விட்டான்.
சந்தைக்கு விற்பனைக்கு வந்து விட்டபோதிலும் ரேட் ஜாஸ்தியாக இருப்பதால் இதுவரை குதிரைபோணியாகாமல் கொள்ளை அசை போட்டபடி புதிய லாலுவுக்காக காத்திருக்கிறதாம்.