இட ஒதுக்கீடு என்பது மோசடி: திருமாவளவன்
திருவண்ணாமலை:இடஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த மோசடி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அம்பேத்கரின் 116வது பிறந்த நாள் விழாவில் திருமாவளவன் பேசியதாவது,
இப்போது சமூகத்தில் நீதியில்லை, ஜாதிய நீதி தான் இங்கு தலைவிரித்தாடுகிறது. இன்றைக்கு இட ஒதுக்கீடுமூலம், வளர்ச்சி அடைந்தவர்கள்தான் பயன் பெறுகிறார்கள்.
அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 15% இட ஒதுக்கீடு இல்லை. இந்த இடஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த மோசடியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட, இட ஒதுக்கீட்டில் மோசடி செய்ய தவறானதகவல்களை தருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டில் இருந்து தலித்களில் கிரீமி லேயரை பிரிக்க வேண்டும் என்ற உச் நீதிமன்ற தீர்ப்பானது, தலித்மக்களின் வருக்கால வாழ்வுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம்,இடஒதுக்கீடு பெற வாய்ப்புள்ள மக்கள் கூட அதை பெற முடியாத நிலை ஏற்படும் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications