நான் போராடினால் நாடு குலுங்கும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எல்லாப் போராட்டங்களிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். அதேசமயம், போராட்டத்தில் கலந்து கொள்ளநான் முடிவெடுத்தால் அந்தப் போராட்டத்தால் தமிழ்நாடே குலுங்கிப் போகும் அளவுக்கு பிரமாண்டமானதாகஇருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணையும் விழா சென்னைகோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில், தேமுதிகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கட்சியைஅழித்து விடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். கோவை மாவட்ட நிர்வாகி பொன்னுச்சாமி மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.

இந்தக் கல்யாண மண்டபத்தில்தான் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, திமுகவினர் உள்பட லட்சக்கணக்கானோர்தேமுதிகவில் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுக்க முடியாமல்தான் இதை இடித்து விட துடிக்கிறார்கள்.

கல்யாண மண்டபத்தை இடித்து விட்டால் கட்சியை அழித்து விடலாம் என்பது அவர்களது கணக்கு. ஆனால்கட்சியும் அழியாது, நானும் கலங்கிப் போய் விட மாட்டேன்.

ரவுடிகளையெல்லாம் சிறையிலிருந்து திறந்து வெளியே விட்டு விட்டு இப்போது அவர்களை சுட்டுக் கொன்றுவருகிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து கேட்கிறார்கள். நான் அப்படி அல்ல, எல்லாப்போராட்டங்களிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். அப்படி நான் கலந்து கொள்ளும் போராட்டம்

என்றால் அப்போராட்டத்தால் தமிழ்நாடே குலுங்கிப் போய் விடும். அப்படி ஒரு போராட்டத்தைதான் நான்நடத்துவேன் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+