ஜெகஜால ஜெயலட்சுமியின் அண்ணன் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:ஏட்டு முதல் எஸ்.பி. வரை காக்கிகளில் பல தரப்பட்டவர்களையும் வளைத்துப்போட்டு தமிழகத்தையே உலுக்கிய சிவகாசி ஜெயலட்சுமியின் அண்ணன் ராஜாராம்,பண மோசடி வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார்.

சிவகாசி ஜெயலட்சுமியின் மூத்த சகோதரர் ராஜாராம். இவர் மதுரை சம்மட்டிப்புரத்தில்வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சுண்ணாம்பு வியாபாரம் செய்வதாகவும்,சுண்ணாம்புத் தூளை அடைத்து விற்பனை செய்ய பாலிதீன் பைகள் தேவை என்றும்பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த கோவில்பட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவர் ரூ.65,000 மதிப்புள்ள பாலிதீன் பைகளை ராஜராமுக்கு விற்றார். இதேபோலமதுரையைச் சேர்ந்த ஜி.எம். பர்னிச்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூ. 88,000மதிப்புள்ள பொருட்களை ராஜாராம் வாங்கினார்.

மேலும் அதேபோல மதுரையைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் ரூ. 78,000மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்களை வாங்கியுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பின்தேதியிட்ட காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் அத்தனை காசோலைகளும்திரும்பி விட்டன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைவரும் ராஜாராமைத் தேடி வந்தபோது அங்குஅவர் இல்லை. காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதேபோல கோவை,ராசிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக ரூ. 25 லட்சம்வரை மோசடி செய்துள்ளார் ராஜாராம்.

இதுதொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.இதைத் தொடர்ந்து ராஜாராமை போலீஸார் தேடி வந்தனர்.

ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். ராஜாராமால் ஏமாந்த சிலர் அவரைஉடுமலைப்பேட்டையில் வைத்துப் பிடித்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜெயலட்சுமியைத் தொடர்ந்து அவரது குடும்பத்தில் இன்னொருவரும் மோசடிவழக்கில் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+