சாய்பாபா கட்டிய ஸ்டேடியம்-கலாம் திறக்கிறார்
புட்டபர்த்தி:ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ரூ. 20 கோடி மதிப்பில் சாய்பாபா கட்டியுள்ள அதிநவீன உள் விளையாட்டு அரங்கத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளைதிறந்து வைக்கிறார்.
புட்டபர்த்தியில் உள்ள வித்யாகிரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கத்திற்கு சத்யசாய்சர்வதேச உள் விளையாட்டு அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
டென்னிஸ், பேட்மிண்டன், ஸ்குவாஷ், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ்ஆகிய விளையாட்டுக்களை இங்கு நடத்தலாம். மைதானத்தின் ஆடுகளம் முழுக்கசெயற்கை ரப்பரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் புதன்கிழமைதிறந்து வைக்கிறார். சாய்பாபாவும் இதில் பங்கேற்கிறார். இந் நிகழ்ச்சியையொட்டிபலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.நக்சலைட்டுகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு விடாமல் தடுக்கும் பொருட்டுஅனந்தபூர் மாவட்டம் மற்றும் புட்டபர்த்தியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications