முல்லைத் தீவில் இலங்கை விமான படை தாக்குதல்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகள் மீது இன்று இலங்கை விமானப் படை பயங்கரதாக்குதல் நடத்தியது. எக்காரணமும் இன்றி திடீரென இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று புலிகள் மாவீரர் தினத்தை கடைபிடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிளிநொச்சிக்கு 8 கி.மீ. தொலைவில் வடக்கச்சி என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் வந்து விழுந்துவெடித்தன. மேலும் முல்லைத் தீவில் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் கடற்படை பயிற்சி மையத்தின் மீதும்விமானங்கள் குண்டு வீசின.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை என புலிகளின் செய்தித்தொடர்பாளர் ராசைய்யா இளந்திரையன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இலங்கைக்கு நிதியுதவி செய்யும் அமெரிக்கா, ஜப்பான், நார்வே மற்றும் ஐரோப்பிய யூனியன்நாடுகள் வாஷிங்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றன.
இதற்கிடையே 4 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரும் சனிக்கிழமை இந்தியா வருகிறார்.டெராடூனில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்கும் ராஜபக்ஷே திங்கள்கிழமை டெல்லி வருகிறார்.
இந் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாள் சிவசங்கர் மேனன் நாளை கொழும்பு செல்கிறார். அப்போதுதமிழர்கள் மீதான ராணுவ தாக்குதல்கள் குறித்தும், யாழ்பாண நெடுஞ்சாலை திறப்பு குறித்தும் விவாதிப்பார்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications