பஸ்சில் போலீஸ் புடை சூழ திருடிய கைதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை:வழக்கு விசாரணைக்காக பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்ட கைதி, தனது அருகே அமர்ந்திருந்த பயணியின் செல்போன், பணம்உள்ளிட்டவற்றை திருடிய பலே சம்பவம் மதுரை அருகே நடந்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓடும் ரயிலில் பயணிகளிடம்சூட்கேஸ் திருடுவதில் ஜெகஜால கில்லாடி. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையஇவரை போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

இந் நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றில் இவரைஆஜர்படுத்தவதற்காக அரசுப் பேருந்து மூலம் போலீஸார் வேலூரிலிருந்து அழைத்துவந்தனர்.

மதுரை அருகே மேலூரில் பஸ் வந்தபோது, அந்த பேருந்திலிருந்து ஒரு சூட்கேஸ்பறந்து ஜன்னல் வழியாக சாலையில் விழுந்தது. இதை பின்னால் வந்து கொண்டிருந்தஇன்னொரு அரசுப் பேருந்தின் டிரைவர் பார்த்து திடுக்கிட்டார்.

என்னடா இது என்று குழம்பிய அவர் முன்னால் சென்ற பேருந்தை ஓவர்டேக் செய்துஅப்பேருந்தை நிறுத்தினார். ஜன்னல் வழியாக சூட்கேஸ் வந்து விழுந்ததாக அவர்டிரைவரிடம் கூறவே, அந்த பேருந்தில் குழப்பம் ஏற்பட்டது. அனைத்துப்பயணிகளும் தங்களது சூட்கேஸ்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்கும்படிடிரைவரும், கண்டக்டரும் கூறினர்.

இதையடுத்து அனைவரும் சோதனை செய்து பார்த்தபோது, சென்னையைச் சேர்ந்ததனியார் நிறுவன அதிகாரி வெங்கடேஷ் குமார் என்பவரின் சூட்கேஸ் மட்டும்காணவில்லை. இதையடுத்து அவருக்கு அருகே அமர்ந்திருந்த கைதி ராஜேந்திரன் மீதுசந்தேகம் எழுந்தது.

அவரை போலீசார் சோதனையிட்டபோது அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேசெல்போன், பணம், ஏ.டி.எம். கார்டு, செக் ஆகியவை கிடந்தன.

சூட்கேஸை திறந்து பொருட்களை லாவகமாக திருடிய ராஜேந்திரன் சூட்கேஸை தூக்கிநைசாக வெளியே போட்டுள்ளார். 3 போலீஸார் அருகே அமர்ந்திருந்த நிலையிலும்கூட தனது திருட்டுப் பழக்கத்தை விட முடியாத ராஜேந்திரன் சூட்கேஸ் திருடியதாகதற்போது புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+