இந்தியர்.. துபாய் சிறையில் 21 ஆண்டுகளாய்

Subscribe to Oneindia Tamil

துபாய்:துபாய் சிறையில் பால் ஜார்ஜ் என்ற இந்தியர் 21 ஆண்டுகளாக வாடி வருகிறார்.துபாயிலேயே அதிக காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜார்ஜ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.

பால் ஜார்ஜ் கடந்த 1979ம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக துபாய்க்கு வந்தார்.துபாயில் உள்ள அவரது சகோதரரின் பர்னிச்சர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.தச்சரான ஜார்ஜ், 39 வயதாக இருந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த 2 குடும்பங்களைச்சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேரை படுகொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

துபாய் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில்வாடி வருகிறார். மது போதையில் இக்குற்றத்தை செய்ததாக அப்போது கூறப்பட்டது.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் இவரை மன்னிப்பதாக கடந்த1996ம் ஆண்டு அறிவித்தனர். இதனால் அவருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் அவரை துபாய் அரசு விடுதலை செய்யவும்இல்லை.

இதுகுறித்து கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு ஜார்ஜ் கொடுத்துள்ள பேட்டியில், இருபாகிஸ்தான் குடும்பத்தினரும் என்னை மன்னிப்பதாக தெரிவித்தும் கூட துபாய் அரசுஎன்னை விடுதலை செய்யவில்லை.

என்னை விடுதலை செய்ய முயற்சிகள் செய்வதாக இந்திய அரசு கூறி வருகிறது.இருப்பினும் இதுவரை எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. எனது மகன்தொடர்ந்து இந்தியத் தூதரகத்தை இதுதொடர்பாக நாடி வருகிறான். ஆனால் ஒருபயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜார்ஜுக்கு தற்போது 60 வயதாகிறது. அவர் சிறைக்குச் சென்றபோது அவரதுமகளுக்கு 10 வயதும், மகனுக்கு 3 வயதும் நடந்து கொண்டிருந்தது. இருவரும்அப்போது இந்தியாவில் இருந்தனர். தற்போது ஜார்ஜின் மகள் துபாய் அருகே உள்ளஅஜ்மான் எமிரேட் என்ற இடத்தில் வசிக்கிறார். மகன் துபாயில் பணியாற்றிவருகிறார்.

துபாயிலேயே அதிக காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜார்ஜ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+